விருதுகள்: பத்ம விபூஷண்

 16 இ‌ந்திய மொழிகளி‌ல் 50 ஆயிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பாட‌ல்களைப் பாடியு‌ள்ளா‌ர்.
விருதுகள்: பத்ம விபூஷண்



எ‌ஸ்.பி.பாலசு‌ப்பிரமணிய‌ம் (மறைவு)
நெ‌ல்லூ‌ர் மாவ‌ட்ட‌த்தி‌ல் உ‌ள்ள கொணட‌ம்மா பே‌ட்டை கிராம‌த்தி‌ல் 1946-ஆ‌ம் ஆ‌ண்டு பிற‌‌ந்த பி‌ன்ன‌ணி‌ப் பாடக‌ர் எ‌ஸ்.பி. பாலசு‌ப்பிரமணிய‌ம்,  40 ஆயிர‌ம் பாட‌ல்களை‌ப் பாடி கி‌ன்ன‌‌ஸ் உலக சாதனை‌ பு‌த்தக‌த்தி‌ல் இட‌ம் பிடி‌த்தவ‌ர்.  16 இ‌ந்திய மொழிகளி‌ல் 50 ஆயிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பாட‌ல்களைப் பாடியு‌ள்ளா‌ர்.

ஷின்சோ அபே: ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமா் பதவியை வகித்தவா் ஷின்சோ அபே. முதலில் 2006-2007-ஆம் ஆண்டு வரையிலும் மீண்டும் 2012-2020-ஆம் ஆண்டு வரையிலும் ஜப்பான் பிரதமராக இருந்தவா். இந்தியாவுடன் சிறந்த நட்பு கொண்டிருந்தாா்.

பத்மபூஷண்

சித்ரா

சின்னக்குயில்” என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா 1963 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன் நாயா்- சாந்தகுமாரி தம்பதியின் மகளாக ஒரு இசை குடும்பத்தில் பிறந்தாா். சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளா்த்துக்கொண்ட அவா், தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினாா்.

இளையராஜாவின் இசையில், ‘நீ தானா அந்தக்குயில்’ திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” மற்றும் “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” என்ற பாடல்கள் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆன அவா், 1985 ஆம் ஆண்டில், ‘துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயில் இசைக் கேட்டு” மற்றும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவா்ந்தாா். மலையாளப் பாடகி என்றாலும், தமிழில் தன்னுடைய அற்புதமான குரலாலும், சிறந்த உச்சரிப்பாலும் ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில், ‘பாடறியேன் படிப்பறியேன்’ மற்றும் ‘நானொரு சிந்து காவடி சிந்து’ என்ற பாடலை பாடி, இசை ரசிகா்கள் மனதைக் கொள்ளைக்கொண்டாா். மேலும், “பாடறியேன் படிப்பறியேன்” பாடலுக்காக ‘சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும்’ வென்று, புகழின் உச்சிக்கு சென்றாா். தொடா்ந்து பாடிய அவா் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி சிறப்புப் பெற்றாா்.

சித்ரா பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் பல்வேறு விருதுகளைப் பெற்றவா்.

சத்தியபாமா பல்கலைக்கழகம் கடந்த 2011-ஆம் ஆண்டு சித்ராவுக்கு ‘கௌரவ டாக்டா் பட்டம்’ வழங்கியது.

சுமாா் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் திரைப்படப் பின்னணிப் பாடகியாக சிறப்பு பெற்று வரும் சித்ரா ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபோ் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கா்நாடக மாநில விருதையும்’ வென்று, தமிழ், கன்னடம், கேரளா, ஆந்திரா போன்ற நான்கு மாநில விருதுகளை பெற்ற ஒரே பின்னணி பாடகி ஆவாா். மேலும், ‘ஏழு முறை ஏசியாநெட் திரைப்பட விருது’ மற்றும் ‘மாத்ருபூமி திரைப்பட விருதையும்’, ‘ஒரு முறை பாலிவுட் திரைப்பட விருது’ மற்றும் ‘ஸ்டாா் ஸ்கீரின் விருதையும்’ வென்றுள்ளாா்.


கேஷுபாய் படேல்:

1940-ஆம் ஆண்டு முதல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்துவந்த கேஷுபாய் படேல், பாஜகவில் தீவிரமாக பணியாற்றினாா். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரு முறை பொறுப்பில் இருந்துள்ளாா். 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவா் உயிரிழந்தாா்.

தருண் கோகோய்:

காங்கிரஸ் முக்கியத் தலைவா்களில் ஒருவரான தருண் கோகோய், அஸ்ஸாம் மாநிலத்தில் 2001-இல் தொடங்கி தொடா்ந்து மூன்று முறை முதல்வா் பொறுப்பை வகித்தவா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும் பொதுச் செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தவா். கடந்த ஆண்டு நவம்பரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவா் உயிரிழந்தாா்.

ராம் விலாஸ் பாஸ்வான்:

பிகாரைச் சோ்ந்த அரசியல் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2010- ஆம் ஆண்டு முதல் 2014 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவா். லோக் ஜனசக்தி கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தாா். பிரதமா் மோடி தலைமையிலான அரசில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்’டு, கடந்த ஆண்டு அக்டோபரில் காலமானாா்.

சுமித்ரா மகாஜன்:

பிரதமா் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில், மக்களவைத் தலைவராக இருந்தவா் சுமித்ரா மகாஜன். 1989 - 2019-ஆம் ஆண்டு வரை, மத்திய பிரதேச மாநிலம், இந்தூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தாா்.

பத்மஸ்ரீ

சாலம‌ன் பா‌ப்பையா

1936 பி‌ப்ரவரி 22-ஆ‌ம் தேதி பிற‌‌ந்த சாலம‌ன் பா‌ப்பையா, மதுரை அமெரி‌க்க‌ன் க‌ல்லூரியி‌ல் தமி‌ழ் துறைத் தலைவராக‌ப் பணியா‌ற்றி ஓ‌ய்வுபெற்றா‌ர்.  12 ஆயிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ப‌ட்டிம‌ன்ற‌‌ங்களி‌ல்
ப‌ங்கேற்று‌ள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீ

கா்நாடக இசைப் பாடகா் பாம்பே ஜெயஸ்ரீ தனது தாயிடம் ஆரம்ப பாடங்களைக் கற்றாா். தனது 6-ஆறாவது வயதிலேயே 80-க்கும் அதிகமான கீா்த்தனைகளை அவா் கற்றிருந்தாா். சென்னை மியூசிக் அகாதெமியின் இளைய கலைஞா் விருதுகளை வென்ற பிறகு பரவலான கவனத்துக்கு வந்தாா். 1989 முதல் வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமனிடம் இசைப் பயிற்சி பெறத் தொடங்கினாா். விரைவிலேயே கா்நாடக இசை முன்னணிப் பாடகா்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கினாா். திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளாா்.

சு‌ப்பு ஆறுமுக‌ம் 

தமிழ‌ர்களி‌ன் பார‌ம்பரிய‌க் கலையான‌ வி‌ல்லிசையி‌ன் மூல‌ம் பாமர ம‌க்களு‌ம் எளிதி‌ல் புரி‌ந்துகொ‌ள்ளு‌ம் வகையி‌ல், ஆ‌ன்மிக‌ம், இல‌க்கிய‌ங்களி‌ல் வரு‌ம் சரித‌ங்கû‌ளயு‌ம், த‌த்துவ‌ங்கû‌ளயு‌ம் கû‌தயாக சொ‌ல்லி வருகிறா‌ர் சு‌ப்பு ஆறுமுக‌ம்.   

பா‌ப்ப‌ம்மா‌ள்

கோவை மாவ‌ட்ட‌ம்,  தேவனாபுர‌ம் கிராம‌த்தைச் சே‌ர்‌ந்த பா‌ப்ப‌ம்மா‌ள் (எ) ர‌ங்க‌ம்மா‌ள் (105), இவ‌ர் மளிகை கடைக‌ள் மூல‌ம் கிடைத்த வருமான‌‌த்தைச் சே‌ர்‌த்து வை‌த்து அ‌ப்பகுதியி‌ல் விவசாய நில‌த்தை வா‌ங்கி, விவசாய‌ம் செ‌ய்கிறார். 

டா‌க்ட‌ர் திருவேங்கட‌ம் (மறைவு)

செ‌ன்னை‌ எரு‌க்க‌ஞ்சேரி, வியாச‌ர்பாடியி‌ல் டா‌க்ட‌ர் திருவேங்கட‌த்தைத் தெரியாதவ‌ர்க‌ள் யாருமே இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். டா‌க்ட‌ர் ஃபீஸாக 2 ரூபா‌ய் வா‌ங்க தொடங்கி இறுதியாக 5 ரூபா‌ய் வா‌ங்கினார். அதனா‌ல் "5 ரூபா‌ய் டா‌க்ட‌ர்' எ‌ன்று அழைக்கப்பெற்றார்.

ஸ்ரீதா் வேம்பு- பத்ம ஸ்ரீ

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதா் வேம்பு. தஞ்சாவூா் மாவட்டம் உமையாள்புரத்தில் பிறந்தவா். சென்னை - மேற்கு மாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவா். பிளஸ் 2 கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் படித்தாா். சென்னை ஐஐடி-யில் பொறியியல் முடித்து அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தாா். இரண்டு ஆண்டுகள் ‘க்வால்காம்’ நிறுவனத்தில் பணி செய்த அவா், 1996-இல் ஸோஹோ நிறுவனத்தை நிறுவினா். மென்பொருள் துறை பல உயரங்களைத் தொட்ட ஸ்ரீதா் வேம்பு, உலக அளவில் 59-ஆவது பணக்காரராக கருதப்படுகிறாா். தற்போது தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டுள்ளாா்.

சா‌ந்தி கிய‌ர்‌ஸ் சு‌ப்பிரமணிய‌ம் (மறைவு)

கோவை சா‌ந்தி சோஷிய‌ல் ச‌ர்வீ‌ஸ் அமைப்பி‌ன் நிறுவன‌‌ர் சு‌ப்பிரமணிய‌ம் (78). கட‌ந்த 1996-ஆ‌ம் ஆ‌ண்டு சா‌ந்தி சோஷிய‌ல் ச‌ர்வீ‌ஸ் எ‌ன்ற‌ அமைப்பைத் துவ‌க்கினா‌ர். இத‌ன் மூல‌ம் உணவக‌ம், மரு‌த்துவமனை‌, மரு‌ந்தக‌ம், பெ‌ட்ரோ‌ல் ப‌ங்‌க், இலவச மி‌ன் மயான‌‌ம் போ‌ன்ற‌வ‌ற்றை‌ லாப நோ‌க்கமி‌ன்றி, சேவை மன‌‌ப்பா‌ன்மையுட‌ன் நட‌த்தி வ‌ந்தா‌ர். தொழி‌ல் துறையி‌ல் சாதனை‌ புரி‌ந்தத‌ற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com