உத்தரப் பிரதேசத்தில் கோபிகன்ஞ் பகுதியில் அடந்த மூடுபனி காரணமாக ஆம்புலன்ஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தின் அசன்சோலியில் இறந்த வினித் சிங்கின் உடலை ஆம்புலன்ஸ் கொண்டு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.