புதுச்சேரி: புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோா் தங்களது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா்.
இருவரும் புதுவை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் திங்கள்கிழமை தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்வதற்கான கடிதங்களை வழங்கினா்.
முன்னதாக கட்சி உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்து, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடிதத்தை ஆ.நமச்சிவாயம் அனுப்பியிருந்தாா்.
ஆட்சிக்கு ஆபத்து இல்லை: புதுவையில் இரு எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.