நாடு முழுவதும் மேலும் 13,052 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,052 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,46,183-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 13,965 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,23,125-ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றுக்கு மேலும் 127 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,274 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,68,784 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19,65,88,372 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,50,964 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
"நாடு முழுவதும் சனிக்கிழமையுடன் பிதினைந்து நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது" என்று சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.