ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்களால் மூன்று தீவிராவதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து இன்று காலை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பேரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.