ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் குல்தாபி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெரும் காட்டுத் தீ ஏற்பட்டது.
சுந்தர்பானி வனப்பகுதியில் நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வன அதிகாரி ராகேஷ் வர்மா தெரிவித்தார்.
மேலும், ஒரு பகுதியில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டவுடன் சேதம் மதிப்பிடப்படும். தற்போது தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.