சூதாட்டம்: குஜராத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட 25 பேர் கைது

குஜராத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

குஜராத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
குஜராத்தின் கோத்ரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பஞ்ச்மஹால் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிசார்ட்டிற்கு சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பாஜக எம்எல்ஏ கேசரிசிங் சோலங்கி உள்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ .5.81 லட்சம் ரொக்கம், 9 மது பாட்டில்கள் மற்றும் எட்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 
கைதான அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com