மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,336 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,336 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,23,225 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று 123 பேர் பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,23,030ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,378 மீண்டனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58,48,693ஆக உயர்ந்துள்ளது. 6,38,004 பேர் வீடுகளிலும், 4,198 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிப்பகுதியான தாராவில் இன்று யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com