உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு, புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பதவியேற்றுக்கொண்ட மற்றவர்களுக்கும், அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் தனது சுட்டுரையில், ‘‘இன்று பதவியேற்றுக்கொண்ட புஷ்கர் தாமி மற்றும் இதர அனைவருக்கும் வாழ்த்துகள். உத்தரகண்ட் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அவர்கள் பணியாற்றுவதால், இந்த குழுவுக்கு மிகச்சிறந்த வாழ்த்துகள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.