நாட்டில் 35.28 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 35.28 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
நாட்டில் 35.28 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

நாடு முழுவதும் 35.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14,81,583 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 35,28,92,046 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 28,83,23,682 பேர் முதல் தவணையும் 6,45,68,364 பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், இதுவரை 18 முதல் 44 வயதுடையோருக்கு முதல் தவணையாக 10,07,24,211 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 27,77,265 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 9,07,90,116 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 1,89,54,073 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 6,89,93,767 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 2,58,54,470 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

நாட்டில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம் என்ற திருத்தப்பட்ட புதிய தடுப்பூசி கொள்கை ஜூன் 21ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com