புது தில்லி: இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையில் காலியாக இருக்கும் தலைமைக் காவலர் பணிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையின் தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியுள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட இந்தோ - திபெத் எல்லைக் காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இணைய முகவரி அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க.. https://recruitment.itbpolice.nic.in/
எனினும், ஜூலை 5ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்த இணைய முகவரி செயலில் இல்லை. எனினும், விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் தொடர்ந்து இந்த இணைய முகவரியை சரிபார்த்து, நல்வாய்ப்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.