நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 35.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் நாடு முழுவதும் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இன்று இரவு 7 மணி வரை வழங்கப்படுகின்றன.

இதுவரை 29.11 கோடி(29,11,72,390) பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6.63 கோடி(6,63,81,222) பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுகொண்டுள்ளனர். 

மொத்தமாக 35.75 கோடி(35,75,53,612) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுகாதாரத்துறையினர் முதல் தவணை - 1,02,33,029, இரண்டாம் தவணை - 73,30,716 

முன்களப்பணியாளர்கள் முதல் தவணை - 1,76,03,102, இரண்டாம் தவணை - 97,12,243 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

மேலும் வயதுவாரியாக, மாநிலவாரியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

​​

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com