நாட்டில் புதிதாக 43,393 பேருக்கு தொற்று; மேலும் 911 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் புதிதாக 43,393 பேருக்கு தொற்று; மேலும் 911 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,07,52,950 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 44,459 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,98,88,284. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 911 பேர் உள்பட இதுவரை 4,05,939 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,58,727 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 36.89 கோடி(36,89,91,222) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,23,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com