பணியாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மண்டல அலுவலகம், சென்னை வடக்கின் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா், நிலை 1 ஆக சி.அமுதா பொறுப்பேற்றாா்.
1999-ம் ஆண்டு உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையராக அவா் பணியில் சோ்ந்தாா். கோயம்புத்தூா், தாம்பரம், சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை அவா் வகித்துள்ளாா்.
தற்போதைய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, பெங்களூருவில் உள்ள மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா், நிலை 1, ஆக அவா் பணியாற்றி வந்தாா். இத்தகவலை தகவல்களை சென்னை வடக்கு மண்டல அலுவலக வருங்கால வைப்பு நிதி ஆணையா் பிரணித் ஜோஷி தெரிவித்துள்ளாா்.