மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கும் நியாயம் கிடைக்கும், கர்நாடகத்திற்கும் நியாயம் கிடைக்கும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளார்.
இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விரிவாக படிக்க: நீர்வளத் துறை அமைச்சருடன் எடியூரப்பா சந்திப்பு
பெங்களூருவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன் பிறகு அமைச்சர் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று கூறினார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் கருத்தும் கேட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.