கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 35 மற்றும் 41 வயதுடைய இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் பரிசோதனை செய்யும் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.