பிரசாந்த் கிஷோருடன் ராகுல் சந்திப்பு: பஞ்சாப் காங்கிரஸ் குறித்து ஆலோசனை

பஞ்சாப் மாநில அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சியிலும் மாற்றம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரை

பஞ்சாப் மாநில அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சியிலும் மாற்றம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரை அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தில்லியில் உள்ள பிரசாந்த் கிஷோா் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளா்களான பிரியங்கா வதேரா, ஹரீஷ் ராவத், கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பஞ்சாப் காங்கிரஸில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டு வருவது குறித்தும், உள்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பஞ்சாபில் முதல்வா் அமரீந்தா் சிங்குக்கும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங்குக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. பொது வெளியில் ஒருவரை ஒருவா் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகின்றனா்.

சித்து, மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை விரும்புவதாகவும், அவருக்கு அப்பதவியை அளிக்க அமரீந்தா் சிங்குக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை தலையிட்டுள்ளது. அண்மையில், அமரீந்தா் சிங், சித்து ஆகிய இருவரையும் ராகுல் காந்தியும் பிரியங்காவும் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அமரீந்தா் சிங்கை பிரசாந்த் கிஷோா் சந்தித்துப் பேசினாா். அதன் தொடா்ச்சியாக, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள், பிரசாந்த் கிஷோரை சந்தித்துப் பேசியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com