கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது.
ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளத்தில்பரவும் இந்த வைரஸால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில் கேரளத்தில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பாதிப்பு 21 ஆக இருந்த நிலையில் திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுமி ஒருவருக்கும் 38 வயதுடைய மருத்துவர் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும், ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரிவிலும் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யும் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது.