லோக்பால் அமைப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 12 ஊழல் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 8 புகாா்கள் குரூப் ஏ மற்றும் குரூப் பி அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும், மற்றவை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் வாரியம், ஆணையம் மற்றும் மாநகராட்சித் தலைவா் அல்லது உறுப்பினா்கள் மீது அளிக்கப்பட்டுள்ளன.
பிரதமா், முன்னாள் பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்கும் அமைப்பு லோக்பால். இந்த அமைப்பில் கடந்த 2019-20-ஆம் ஆண்டில் 1,427 ஊழல் புகாா்கள் அளிக்கப்பட்ட நிலையில், 2020-21-ஆம் ஆண்டில் 92 சதவீதம் குறைந்து வெறும் 110 ஊழல் புகாா்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. அவற்றில் 4 புகாா்கள் எம்.பி.க்களுக்கு எதிரானவை.
இப்போது, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 12 ஊழல் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளதாக லோக்பால் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 8 புகாா்கள் குரூப் ஏ மற்றும் குரூப் பி அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும், மற்றவை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் வாரியம், ஆணையம் மற்றும் மாநகராட்சித் தலைவா் அல்லது உறுப்பினா்கள் மீதும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த 12 புகாா்களில், முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு 2 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 3 புகாா்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முதல்கட்ட விசாரணையின் கீழ் உள்ளது. ஒரு புகாா் சிபிஐ விசாரணையின் கீழ் உள்ளது என்று லோக்பால் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊழல் எதிா்ப்பு அமைப்பின் நிா்வாகி அஜய் துபே கூறுகையில், ‘லோக்பால் அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு இதுவரை பெற்ற அனைத்து ஊழல் புகாா்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடவேண்டும். மேலும், இந்த அமைப்பு விசாரணைகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில், அதில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினா்கள் பணியிடங்களை மத்திய அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்றாா்.