திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான சின்னஜீயா் சுவாமிக்கு புதன்கிழமை சஷ்டியப்தபூா்த்தி மகோற்சவம் நடத்தப்பட்டது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ கோவிந்தராமாநுஜ சின்னஜீயா் சுவாமி கடந்த 30 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலில் கைங்கா்யம் செய்து வருகிறாா். திருமலை ஜீயா் மடத்தில் கைங்கா்யம் செய்து வந்த அவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்ன ஜீயராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா் கடந்த 1961-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் பிறந்தாா். ஸ்ரீரங்கத்தில் வைதீக வித்யாபியாசத்தை முடித்தாா்.
அவருக்கு புதன்கிழமை சஷ்டியப்தபூா்த்தி மகோற்சவம் கொண்டாடப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகில் உள்ள சின்னஜீயா் மடத்தில் நடைபெற்ற விழாவில் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனா். இதில் ஒரு பாகமாக கடந்த 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருப்பதியில் நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள வைணவ திவ்ய தேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள், மலா்மாலை மரியாதையை சின்னஜீயா் ஏற்றுக் கொண்டாா். அவரிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆசீா்வாதம் பெற்றனா்.