ஓராண்டுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நேரடியாக தொடங்கியது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கரோனா பெருந்தொற்று தொடங்கியபோது, அமைச்சரவை கூட்டம் நேரடியாக கூடியது. இதனிடையே, காணொலி காட்சி வாயிலாக வாரம் ஒரு முறை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுவந்தது.
கடந்த 7ஆம் தேதி, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அதுகுறித்து விவாதிக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் அடிக்கடி கூட்டப்படுகிறது.