புது தில்லி: பாஜக மாநிலங்களவைக் குழுத் தலைவராக மத்திய தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கு முன்பு பாஜக மாநிலங்களவைக் குழுத் தலைவராக இருந்த தாவா் சந்த் கெலாட், கா்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அந்த இடத்துக்கு பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தத் தகவலை மாநிலங்களவைச் செயலகத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை எம்.பி.யான பியூஷ் கோயல், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் தொழில்-வா்த்தகம், உணவு, நுகா்வோா் விவகாரங்கள், ஜவுளி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் உள்ளாா்.
2014-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சராவதற்கு முன்பு பாஜகவின் பொருளாளராக இருந்தாா்.