குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், குடியரசுத் தலைவரை சந்தித்து பிரதமர் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தொடரின்போது, தடுப்பூசி தட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா், ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத் தொடா் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் 20 அமா்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் கூட்டத் தொடா் நிறைவடையும்.