நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதில், மணிப்பூா், கேரளம், ராஜஸ்தான், மேகாலயா, மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அஸ்ஸாம், மகாராஷ்டிரம், புதுச்சேரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த வாரம் இதே அளவிலான பாதிப்பு விகிதம் 73 மாவட்டங்களில் இருந்தது.
கரோனா பாதிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசு எச்சரித்துள்ளது.