நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனா். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.