மும்பை கட்டட விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்: பிரதமர்

​மும்பையில் இருவேறு கட்டட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பையில் இருவேறு கட்டட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மும்பை செம்பூர் பகுதியில் நிலச் சரிவால் சுவர் இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதவிர மும்பையில் விக்ரோலி என்ற பகுதியில் நிகழ்ந்த மற்றொரு கட்டட விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com