‘தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவேன்’: காங். மக்களவை தலைவர்

தேசிய பாதுகாப்பு குறித்த கேள்வியை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எழுப்புவேன் என காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)
ஆதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)

தேசிய பாதுகாப்பு குறித்த கேள்வியை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எழுப்புவேன் என காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஆதீர் ரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. இது குறித்த கேள்வியை மக்களவையில் கண்டிப்பாக எழுப்புவேன் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com