நாட்டில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாக சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் திங்கள்கிழமை கூடின.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய மாநிலங்களவையில் பேசிய சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் அரசு வெளியிடும் புள்ளிவிவரத்தில் குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு எதற்காக மறைக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத் அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கும், அறிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அரசு வெளியிடும் எண்ணிக்கையைக் காட்டிலும் அறிக்கையில் குறிப்பிடப்படும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.