நாடு முழுவதும் இதுவரை 41.52 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 31.79 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 41,52,25,632 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் தவணையாக 32,85,33,933 பேருக்கும், இரண்டாது தவணையாக 8,66,91,699 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.