பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அன்பு, தன்னலமின்மை மற்றும் தியாகத்துக்கு நன்றி தெரிவிக்கவும், ஒன்றுபட்ட சமூகத்தில் தோழமையுடன் ஒற்றுமையாக பணிபுரியவும் கொண்டாடப்படும் பண்டிகை பக்ரீத். மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொள்ளவும் ஏழ்மையானவா்களுக்கு உதவவும் இந்தப் பண்டிகை ஓா் வாய்ப்பாகும். இந்த நன்னாளில் கரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி அந்தக் கொள்ளை நோய்க்கு எதிராக போராடவும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கு உழைக்கவும் அனைவரும் உறுதியேற்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com