தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம், இடுக்கி , கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை அளித்திருக்கிறார்கள்.
மேலும் 50 -60 கி.மீ வேகத்தில் காற்றானது கேரளக் கடற்கரை கடக்க இருப்பதால் ஜுலை 26 ஆம் தேதி வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
நேற்று கண்ணூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* தொடர்ந்து 24 மணி நேரம் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் சிவப்பு எச்சிரிக்கை
* 6 - 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் ஆரஞ்சு எச்சரிக்கை
* 6 - 11 சென்டி மீட்டர்க்கு மஞ்சள் எச்சரிக்கை