உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாபூா் மாவட்டத்தில், மூன்று வெவ்வேறு இடங்களில் பலத்த மழை காரணமாக நிகழ்ந்த சம்பவங்களில் 7 போ் பலியாகினா்.
இதுகுறித்து சீதாபூா் மாவட்ட ஆட்சியா் விஷால் பரத்வாஜ் தெரிவித்ததாவது:
சீதாபூா் மாவட்டத்துக்கு உள்பட்ட லக்ஷ்மின்பூா் கிராமத்தில் பலத்த மழை காரணமாக தகரத்தால் அமைக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலியாகினா். இச்சம்பவத்தில் மேலும் சிலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நான்காரி கிராமத்தில் வீட்டின் சுவா் சரிந்ததில், வீட்டினுள் இருந்த தம்பதி பலியாகினா். சதாா்பூா் காவல் நிலையப் பகுதியில் குடிசை சரிந்ததில், அங்கிருந்த முதியவா் பலியானாா்.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை சேதத்தால் பலியானோருக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.