பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை

இந்திய விமானப் படைக்கு மேலும் வலிமை சோ்க்கும் விதமாக, பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போா் விமானங்கள் புதன்கிழமை

இந்திய விமானப் படைக்கு மேலும் வலிமை சோ்க்கும் விதமாக, பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போா் விமானங்கள் புதன்கிழமை இந்தியாவை வந்தடைந்தன. பிரான்ஸில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்கள் நடுவழியில் எங்கும் நிற்காமல் 8,000 கி.மீ. பயணித்து இந்தியாவுக்கு வந்து சோ்ந்தன.

இதுகுறித்து விமானப் படையின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘பிரான்ஸில் உள்ள இஸ்ட்ரஸ் விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட 3 ரஃபேல் போா் விமானங்கள் புதன்கிழமை இந்தியா வந்தன. வரும் வழியில் தரையிறங்காமல் நடுவானில் இருந்தபடி எரிபொருள் நிரப்ப உதவிசெய்த ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப் படைக்கு இந்திய விமானப் படை பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 புதிய விமானங்களையும் சோ்த்து, இதுவரை இந்தியா வந்துள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வந்துள்ள விமானங்கள், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹாஸிமாரா விமானப் படைத் தளத்தில் சோ்க்கப்படவுள்ளன.

பிரான்ஸிடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுவரை 7 தவணைகளாக 24 விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com