இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அனுமதியளித்துள்ளது. 
இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு
இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு

இமாச்சல் பிரதேசத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி அனுமதியளித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. முதல் இரண்டு அலைகளை எதிர்கொண்ட நிலையில் மூன்றாம் அலையும் வரும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதால் பள்ளிகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வந்தன.

பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. 

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com