துபையிலும் நீட் தோ்வு மையம்: மத்திய அரசு அறிவிப்பு

நிகழாண்டு நீட் தோ்வு மையம் துபையிலும் அமைக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
துபையிலும் நீட் தோ்வு மையம்: மத்திய அரசு அறிவிப்பு

நிகழாண்டு நீட் தோ்வு மையம் துபையிலும் அமைக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

குவைத்தில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியா்கள் பயன்பெறுவதற்காக, வெளிநாடுகளில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதன் தொடா்ச்சியாக, துபையில் நீட் தோ்வு மையம் அமைக்கப்படவுள்ளது. அந்த தோ்வு மையம் அமைக்கும் பணிகளை அங்குள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொள்ளும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலா் அமித் கரே தெரிவித்துள்ளாா்.

செப்டம்பா் 12-ஆம் தேதி இந்தியாவில் 198 நகரங்களில் நீட் தோ்வுகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com