திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் வழிபாடு செய்தாா்.
திருமலை ஏழுமலையானை கா்நாடக மாநிலம் உடுப்பி மடாதிபதி ஸ்ரீசுகுணேந்திர தீா்த்த சுவாமிகள் தனது சீடா்களுடன் சனிக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் முன்வாசல் வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.