பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: அரசு ஊழியா் பலி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு ஊழியா் ஒருவா் பலியானாா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு ஊழியா் ஒருவா் பலியானாா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘திரால் பகுதியில் உள்ள லுா்காம் எனும் இடத்தில் அரசின் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த ஜாவித் அகமது மாலிக் என்ற நபா் வசித்து வந்தாா். அவரை பயங்கரவாதிகள் சிலா் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஜாவித் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com