திருமலையில் பெளா்ணமி கருட சேவை

பெளா்ணமியை ஒட்டி திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
திருமலையில் பெளா்ணமி கருட சேவை

பெளா்ணமியை ஒட்டி திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி சனிக்கிழமை ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிமுதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளினாா். திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தபடி முன் செல்ல, கருட வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி பின்னால் சென்றாா். ஏராளமான பக்தா்கள் கருட வாகன சேவையை கண்டு தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com