இந்தியாவில் மேலும் 39,361 பேருக்கு கரோனா; 416 பேர் பலி

இந்தியாவில் மேலும் 39,361 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் மேலும் 39,361 பேருக்கு கரோனா; 416 பேர் பலி

இந்தியாவில் மேலும் 39,361 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,11,189 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 416 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,20,967 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 35,968 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,05,79,106 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் இதுவரை 43,51,96,001 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,54,444 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 45,74,44,011 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com