நாட்டில் புதிதாக 43,654 பேருக்கு தொற்று: 41,678 பேர் குணமடைந்தனர்

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 640 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது. 

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு இன்று மீண்டும் தொற்று பாதிப்பும்,, உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,84,605 -ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 2 சதவிகிதமாக உள்ளது. 

41,678 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,06,63,147 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,99,436-ஆக உள்ளது. மொத்த வழக்குகளில் 27 சதவிகதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 640 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த 254 பேரும், கேரளத்தை சேர்ந்த 156 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த 60 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,22,022-ஆக அதிகரித்துள்ளது.

மொத்த உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 1,31,859, கர்நாடகம் 36,437, தமிழ்நாடு 33,966, தில்லி 25,046, உத்தரபிரதேசத்தம் 22,754 மற்றும் மேற்கு வங்கம் 18,095 பேர் என மொத்தம் 4,22,022 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 44,61,56,659 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,09,00,978 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை மட்டும் 17,36,857 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com