நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய நாள்முதல் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.