கர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கரோனா பாதிப்புகள் நிலவரம் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 2,052 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் 1332 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,01,247 ஆக உயர்ந்துள்ளது. இதில்28,41,479 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 36,491 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 23,253 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com