திருப்பதி: திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவமனையின் கட்டடத்திலிருந்து விழுந்து கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பத்மாவதி கரோனா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரகிரி மண்டலம் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணய்யா(50) என்பவா், புதன்கிழமை கட்டடத்தில் மேல் தளத்திலிருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.