பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகும், மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் ஒரு நாள் கரோனா பாதப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாகவும், கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாறும்வரை மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் குழுவினர், ஞாயிறன்று கூடி ஆலோசனை நடத்தி, தங்களது பரிந்துரைகளை திங்களன்று அளித்தனர். இது குறித்து முதல்வர் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசன நடத்தி முடிவுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.