புது தில்லி: கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிதியாண்டில், கரோனா பெருந்தொற்றால் தனது நிறுவனத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாமாக முன் வந்து தனது வருவாயை விட்டுக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020- 21-ஆம் ஆண்டு நிதியறிக்கையில், அம்பானியின் ஊதியம் - எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கடந்த நிதியாண்டில் அவருக்கு ஊதியம் என்று ரூ.15 கோடி கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதையே அவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.