கரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை நோய் கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு

நாட்டிலேயே முதல்முறையாக கரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி
நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி



நாட்டிலேயே முதல்முறையாக கரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயதுடை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

தொற்றில் இருந்து குணமடைந்து வந்த அவருக்கு காது பகுதியில் பூஞ்சை நோய் உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். 

இதனைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தோல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணை தாக்கி வந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைவதற்குள் காதுக்கு வந்துள்ள பூஞ்சை நோய் பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com