தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 381 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 76,857 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 1-க்கும் கீழ் குறைந்து 0.5 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,29,244 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.23 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 34 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதேசமயம், 1,189 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 13,98,764 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 24,591 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 1.72 சதவிகிதமாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 5,889 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.