பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் நடத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள செய்முறைத் தேர்வுகளை இணைய வழியாக மட்டும் நடத்தி முடிக்கவும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் (ஜூன்2) மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க 12 போ் கொண்ட குழுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அமைத்துள்ளது.