மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்: கேரள முதல்வர் மகிழ்ச்சி

மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றுகையில், "ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு விலையில்லாமல் தடுப்பூசி விநியோகிக்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது:

"ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது இந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமானது. எங்களது கோரிக்கைக்கு ஏற்ப பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com