மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றுகையில், "ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு விலையில்லாமல் தடுப்பூசி விநியோகிக்கப்படும்" என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது:
"ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது இந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமானது. எங்களது கோரிக்கைக்கு ஏற்ப பிரதமர் நேர்மறையாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது."