நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்பு, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு புதிய பலம் அளிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:
நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் பிரதமா் மோடி மிகப்பெரிய நிவாரணம் அளித்துள்ளாா். அவரது இந்த அறிவிப்பு கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு புதிய பலம் அளிக்கும். பிரதமரின் இந்த பொதுநல முடிவுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின்மூலம், இந்தியாவில் கரோனா தடுப்பூசி தொடா்பாக சந்தேகங்களையும் வதந்திகளையும் பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பிரதமா் மோடி முற்றிலுமாக தகா்த்துள்ளாா். மேலும், தடுப்பூசி நடவடிக்கை மீதான நாட்டு மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளாா். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டு மக்கள் ஆதாரமற்ற எந்தவொரு பிரசாரத்தையும் நம்பாமல், முழு நம்பிக்கையுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் பலமான ஆயுதம் தடுப்பூசி. அதன் மூலம் இந்த கொள்ளைத் தொற்று நோயை நாம் ஒழிக்க இயலும்.
அதேபோல், நவம்பா் மாதம் வரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்றும் பிரதமா் அறிவித்துள்ளாா். இதன்மூலம் நாட்டிலுள்ள 80 கோடி மக்கள் குறிப்பிட்ட அளவு இலவச உணவு தானியம் பெறுவாா்கள். மத்திய அரசு ஏழைகளுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது என்று ராஜ்நாத் சிங் அந்தப் பதிவுகளில் கூறியுள்ளாா்.